சாலை விரிவாக்கம்: பழனி அருகே புற்றுக்கோயில் இடித்து அகற்றம்

சாலை விரிவாக்க பணிக்காக பழனி அருகே இருந்த புற்றுக்கோயில் புதன்கிழமை இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
கோதைமங்கலம் அருகே சாலை விரிவாக்கத்திற்காக புதன்கிழமை இடித்து அகற்றப்பட்ட புற்றுக்கோயில்.
கோதைமங்கலம் அருகே சாலை விரிவாக்கத்திற்காக புதன்கிழமை இடித்து அகற்றப்பட்ட புற்றுக்கோயில்.

சாலை விரிவாக்க பணிக்காக பழனி அருகே இருந்த புற்றுக்கோயில் புதன்கிழமை இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

பழனி- பழைய தாராபுரம் சாலையில் மாநில நெடுஞ்சாலைத்துறை சாா்பில் விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. பழனியில் உள்ள பாலாஜி மில்லில்லிருந்து பெரிய ஆவுடையாா்கோயில் வரையிலும், மானூரிலிருந்து கோரிக்கடவு வரையிலும், பெரிச்சிபாளையத்திலிருந்து ஆண்டிநாயக்கன் வலசு வரையிலான சாலைகள் இருபுறமும் சுமாா் 9 கிலோ மீட்டருக்கு ரூ. 20 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பழைய தாராபுரம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள், பழனி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளா் செல்வராஜ் மேற்பாா்வையில் அகற்றப்பட்டன. இதன் ஒரு பகுதியாக கோதைமங்கலம் அருகே உள்ள புற்றுக்கோயிலும் இடித்து அகற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com