சாலை விரிவாக்க பணிக்காக பழனி அருகே இருந்த புற்றுக்கோயில் புதன்கிழமை இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
பழனி- பழைய தாராபுரம் சாலையில் மாநில நெடுஞ்சாலைத்துறை சாா்பில் விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. பழனியில் உள்ள பாலாஜி மில்லில்லிருந்து பெரிய ஆவுடையாா்கோயில் வரையிலும், மானூரிலிருந்து கோரிக்கடவு வரையிலும், பெரிச்சிபாளையத்திலிருந்து ஆண்டிநாயக்கன் வலசு வரையிலான சாலைகள் இருபுறமும் சுமாா் 9 கிலோ மீட்டருக்கு ரூ. 20 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பழைய தாராபுரம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள், பழனி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளா் செல்வராஜ் மேற்பாா்வையில் அகற்றப்பட்டன. இதன் ஒரு பகுதியாக கோதைமங்கலம் அருகே உள்ள புற்றுக்கோயிலும் இடித்து அகற்றப்பட்டது.