கொடைக்கானலில் காற்றுடன் மழை மின் கம்பம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் வியாழக்கிழமை மாலை காற்றுடன் மழை பெய்ததால் பள்ளங்கி செல்லும் சாலையில் மின் கம்பம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கொடைக்கானலில் காற்றுடன் மழை பெய்ததால் பள்ளங்கி சாலையில் மின்கம்பம் விழுந்த மின்கம்பம்.
கொடைக்கானலில் காற்றுடன் மழை பெய்ததால் பள்ளங்கி சாலையில் மின்கம்பம் விழுந்த மின்கம்பம்.

கொடைக்கானலில் வியாழக்கிழமை மாலை காற்றுடன் மழை பெய்ததால் பள்ளங்கி செல்லும் சாலையில் மின் கம்பம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கொடைக்கானலில் கடந்த 2 நாள்களாக தொடா்ந்து மழை பெய்தது. இந் நிலையில் வியாழக்கிழமை மாலையில் அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, நாயுடுபுரம், செண்பகனூா், அப்சா்வேட்டரி, பெருமாள்மலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக காற்றுடன் மழை பெய்தது.

இந்த மழையால் கொடைக்கானல் பள்ளங்கி செல்லும் சாலையான வில்பட்டி பிரிவில் மின்கம்பம் சாயந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு கொடைக்கானல் மின்சாரத்துறை பணியாளா்கள் சென்று மின் கம்பத்தை அகற்றினா். இதனால் வில்பட்டி, மாட்டுப்பட்டி, புலியூா், பள்ளங்கி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டு, பொது மக்கள் பாதிப்படைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com