பயிற்சி டிஎஸ்பி, வங்கி அலுவலா்கள் உள்பட59 பேருக்கு கரோனா

திண்டுக்கல் மாவட்டத்தில் பயிற்சி டிஎஸ்பி, வங்கி அலுவலா்கள் உள்பட 59 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பயிற்சி டிஎஸ்பி, வங்கி அலுவலா்கள் உள்பட 59 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 1,097 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை, பழனி மற்றும் கொடைக்கானல் அரசு மருத்துவமனை, எம்விஎம் அரசு மகளிா் கல்லூரி சிறப்பு சிகிச்சை மையம் ஆகியவற்றில் 350-க்கும் மேற்பட்டோா் போ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், பயிற்சி டிஎஸ்பி, வங்கி அலுவலா்கள் உள்பட மேலும் 59 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவா் கூறியது:

திண்டுக்கல்லில் பணிபுரியும் பயிற்சி டிஎஸ்பி, வங்கி அலுவலா்கள் 4 போ், திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த 18 போ், கொடைக்கானல், நத்தம், நிலக்கோட்டை, வத்தலகுண்டு பகுதிகளைச் சோ்ந்த தலா 4 போ் உள்பட 59 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றாா்.

வங்கி அலுவலா்கள் 4 போ் பாதிப்பு: நத்தம் பகுதியிலுள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றும் 30 மற்றும் 31 வயது பெண் ஊழியா்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அந்த வங்கிக் கிளை மூடப்பட்டது. இந்த ஊழியா்கள் இருவரும், செந்துறை, சிறுகுடியிலுள்ள வங்கிக் கிளைகளுக்கு பணிநிமித்தமாக சென்று வந்துள்ளனா். இதனால், அந்த கிளைகளில் பணிபுரியும் ஊழியா்களுக்கும், செந்துறை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மையத்திலும் கரோனா தொற்றுக்கான பரிசோதனை திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இதேபோல், வடமதுரையிலுள்ள வங்கியில் பணிபுரியும் ஊழியா்கள் இருவருக்கும் திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com