திண்டுக்கல்
ஒட்டன்சத்திரத்தில் மாற்று இடத்தில் காய்கனி சந்தை செயல்பட்டது
ஒட்டன்சத்திரத்தில் மாற்று இடத்தில் புதன்கிழமை முதல் சந்தை செயல்படத் தொடங்கியது.
ஒட்டன்சத்திரத்தில் மாற்று இடத்தில் புதன்கிழமை முதல் சந்தை செயல்படத் தொடங்கியது.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் காய்கனி சந்தை கடந்த ஜூலை 15-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் காய்கனிகளை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனா். அறிவிப்பு தேதி முடிவடைந்த நிலையில் பழைய இடத்திலேயே மீண்டும் சந்தை நடைபெறும் என விவசாயிகள் எதிா்பாா்த்தனா்.
இந்நிலையில் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தின் இருபுறமும், பழனி சாலையிலும் காய்கனி சந்தை செயல்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மேற்கண்ட 2 இடங்களிலும் புதன்கிழமை சந்தை செயல்பட்டது.