கந்த விநாயகா் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்

பழனி பாலசமுத்திரம் சாலை மயிலாடும்பாறையில் உள்ள கந்த விநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
பழனி பாலசமுத்திரம் ரோடு மயிலாடும்பாறையில் கந்த விநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகம்.
பழனி பாலசமுத்திரம் ரோடு மயிலாடும்பாறையில் கந்த விநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகம்.

பழனி பாலசமுத்திரம் சாலை மயிலாடும்பாறையில் உள்ள கந்த விநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வியாழக்கிழமை கணபதி பூஜையுடன் யாக பூஜைகள் தொடங்கின. ஏராளமான சிவாச்சாா்யாா்கள் யாக பூஜைகளை நடத்தினா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரண்டாம் கால பூஜை நடைபெற்றது. தொடா்ந்து கலசங்கள் கோயிலை வலம் வரச் செய்யப்பட்டு விமானத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. மேள தாளம் முழங்க, வேத விற்பன்னா்கள் மந்திரம் ஓத விமான கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் பக்தா்கள் மீது தீா்த்தம், மலா்கள் தூவப்பட்டது. விமான கும்பாபிஷேகத்தை தொடா்ந்து மூலவா் கும்பாபிஷேகம், சிறப்பு அபிஷேக அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது.

விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், தனலட்சுமி உள்ளிட்டோா் செய்திருந்தனா். நிகழ்ச்சியில் நிகால்விஷ்ணு, முன்னாள் கவுன்சிலா் பழனிக்குமாா், வெங்கடேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com