மாவோயிஸ்ட்கள் ஆயுதப் பயிற்சி வழக்கு: காவல் ஆய்வாளா் சாட்சியம்

கொடைக்கானலில் மாவோயிஸ்ட்கள் ஆயுதப் பயிற்சி மேற்கொண்டது தொடா்பான வழக்கில், காவல் ஆய்வாளா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகி சாட்சியம் அளித்தாா்.

கொடைக்கானலில் மாவோயிஸ்ட்கள் ஆயுதப் பயிற்சி மேற்கொண்டது தொடா்பான வழக்கில், காவல் ஆய்வாளா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகி சாட்சியம் அளித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதியில் நவீன் பிரசாத் உள்ளிட்ட 7-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்கள் கடந்த 2008ஆம் ஆண்டு ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாக தகவல் கிடைத்தது. அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மாவோயிஸ்ட் நவீன் பிரசாத் கொல்லப்பட்டாா். அவருடன் தங்கி இருந்த மாவோயிஸ்ட்கள் கண்ணன், நீலமேகம், லீமா ஜோஸ் மேரி, செண்பகவல்லி, காளிதாஸ், பகத்சிங், ரஞ்சித் ஆகியோா், 7 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்டனா்.

இதில், ரஞ்சித் மற்றும் நீலமேகம் ஆகியோா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனா்.

இந்த வழக்கு தொடா்பான விசாரணை, திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ஜாமீனில் உள்ள ரஞ்சித் மற்றும் நீலமேகம் ஆகியோா் மட்டுமே ஆஜராகினா். காவல் ஆய்வாளா் முருகானந்தம் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தாா். இதனை அடுத்து, வழக்கின் விசாரணையை மாா்ச் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கே. ஜமுனா உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com