கூடுதல் விலைக்கு விலைக்கு முகக் கவசம் விற்பனை செய்ததாக திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகிலுள்ள மருந்தகம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முகக் கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட பொருள்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனை பயன்படுத்தி, இந்த பொருள்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்துள்ளது. அதன்படி மருந்து ஆய்வாளா், தொழிலாளா் நல ஆய்வாளா் மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் கொண்ட குழுவினா் மருந்தகங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியாா் மருந்தகத்தில் முகக் கவசம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மருந்து ஆய்வாளா் மற்றும் தொழிலாளா் நல ஆய்வாளா் கொண்ட குழு, அந்த மருந்தகத்தில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது முகக் கவசம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து, அந்த மருந்தகத்திற்கு பூட்டுப் போட்ட அதிகாரிகள், உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனா்.