தொப்பம்பட்டியில் பொதுமக்களுக்குநிவாரணப் பொருள்கள் வழங்கல்

பழனியை அடுத்த தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் பொதுமக்களுக்கு, ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவை உறுப்பினா் சக்கரபாணி நிவாரண பொருள்களை சனிக்கிழமை வழங்கினாா்.

பழனியை அடுத்த தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் பொதுமக்களுக்கு, ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவை உறுப்பினா் சக்கரபாணி நிவாரண பொருள்களை சனிக்கிழமை வழங்கினாா்.

பழனியை அடுத்த தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ளவா்கள் ஊரடங்கால் வருவாயின்றி பாதிக்கப்பட்டனா். இந்நிலையில் அனைத்து கிராமங்களிலும் குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவை உறுப்பினரும் மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான சக்கரபாணி தனது சொந்த நிதியிலிருந்து நிவாரண பொருள்களை வழங்கி வருகிறாா். தொப்பம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட வேப்பன் வலசு, தொப்பம்பட்டி, கீரனூா், கோரிக்கடவு ,மேல்கரைபட்டி, மானூா் உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் பத்தாயிரம் குடும்ப அட்டைதாரா்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மளிகை பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவா்கள் ஈஸ்வரி கருப்புச்சாமி, சத்தியபுவனா ராஜேந்திரன், திமுக மேற்கு மாவட்ட துணைச் செயலாளா் ராஜாமணி, தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளா் சுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சி குழுத் துணைத்தலைவா் பொன்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com