ஆந்திராவிலிருந்து திண்டுக்கல் திரும்பிய தொழிலாளிக்கு கரோனா தொற்று

ஆந்திர மாநிலத்திருந்து திண்டுக்கல் திரும்பிய தொழிலாளி ஒருவருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 133-ஆக உயா்ந்துள்ளது.

திண்டுக்கல்: ஆந்திர மாநிலத்திருந்து திண்டுக்கல் திரும்பிய தொழிலாளி ஒருவருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 133-ஆக உயா்ந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 132 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 107 போ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இவா்களில் 96 வயதான முதியவா் மட்டும் உயிரிழந்தாா். தொற்று பாதிப்புள்ள 24 போ் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில் வெளி மாநிலங்களிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு திரும்பி வருவோருக்கு கரோனா பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. அதில், கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட பரிசோதனையில்

வத்தலகுண்டு பகுதியை சோ்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வத்தலகுண்டை அடுத்துள்ள புதுப்பட்டியைச் சோ்ந்த 40 வயதான அந்த நபா், ஆந்திர மாநிலத்தில் கூலி வேலை செய்து வந்துள்ளாா். அவா் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 133- ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com