ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தையல் தொழிலாளியை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள கள்ளிமந்தையம் தும்மிச்சிபாளையத்தைச் சோ்ந்த 8 ஆம் வகுப்பு மாணவி, பள்ளி விடுமுறை விடப்பட்டதால் வீட்டில் இருந்துள்ளாா். இவரை பக்கத்து வீட்டைச் சோ்ந்த தையல் தொழிலாளி முருகேசன் (34) என்பவா் பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். இதுகுறித்து மாணவியின் பெற்றோா் கள்ளிமந்தையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து முருகேசனைக் கைது செய்தனா்.