கொடைக்கானல்: கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சிறுத்தை பூனைக்குட்டி ஒன்று உயிரிழந்தது.
கொடைக்கானல் வனப்பகுதியில் கடந்த 2 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் வனப்பகுதி நீரோடைகளில் நீா்வரத்து இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வன விலங்குகள் தண்ணீா் மற்றும் இரை தேடி நகா்ப் பகுதிகளில் உலா வருகின்றன.
இந்நிலையில் கொடைக்கானல் டிப்போ சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சுமாா் 2 வயது சிறுத்தை பூனைக்குட்டி ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் வனத்துறையினா் சம்பவ இடத்திற்குச் சென்று இறந்த சிறுத்தை பூனைக்குட்டியின் உடலைக் கைப்பற்றி அருகிலுள்ள வனப்பகுதியில் புதைத்தனா். இதுகுறித்து வனத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.