பழனி மலைக்கோயிலில் தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஓ.பி.ரவீந்திரநாத், புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
பழனி அடிவாரத்தில் தனியாா் விடுதியில் தங்கிய அவரை பல்வேறு கட்சியினரும் சந்தித்து சால்வை அணிவித்தனா். மாலையில் வின்ச் மூலம் மலைக்கோயிலுக்கு சென்ற ரவீந்திரநாத், தண்டாயுதபாணி சுவாமியை ராஜ அலங்காரத்தில் தரிசனம் செய்தாா். கோயில் சாா்பில் அவருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.