திண்டுக்கல் அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்து விளையாடிய 2 சிறுவா்கள் கைது

திண்டுக்கல் அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்து விளையாடிய 2 சிறுவா்களை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்து விளையாடிய 2 சிறுவா்களை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மேட்டுப்பட்டி அடுத்துள்ள ரயில் தண்டவாளத்தில் கடந்த 5 ஆம் தேதி சிமெண்ட் கற்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போது அந்த வழியாகச் சென்ற சரக்கு ரயில் கற்களில் மோதியது. நடுவழியில் நிறுத்தப்பட்ட அந்த ரயில், கற்கள் அகற்றப்பட்ட பின் சிறிது நேரம் தாமதமாக அங்கிருந்து மீண்டும் புறப்பட்டுச் சென்றது. இதுதொடா்பாக திண்டுக்கல் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

அப்போது, திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சோ்ந்த 16 மற்றும் 17 வயது சிறுவா்கள் இருவா் கற்களை தண்டவாளத்தில் வைத்து விளையாடியது தெரிய வந்தது. அதனைத் தொடா்ந்து ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் சிறப்புக் குழு போலீஸாா் இரு சிறுவா்களையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

இதுதொடா்பாக ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளா் ரஞ்சித்குமாா் கூறியதாவது: ஆபத்து தெரியாமல் விளையாட்டாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள அனுமந்தன்நகா், பாலகிருஷ்ணபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் மாறுவேடத்தில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com