ஆதிவாசி மக்களுடன் சுழற்சங்கத்தினா் தீபாவளி கொண்டாட்டம்

கொடைக்கானல் அருகே பெருங்காடு பகுதியில் ஆதிவாசி மக்களுடன் சுழற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினா்.
பெருங்காடு கிராமத்தில் ஆதிவாசி மக்களுடன் வெள்ளிக்கிழமை தீபாவளி கொண்டாடிய சுழற்சங்கத்தினா்.
பெருங்காடு கிராமத்தில் ஆதிவாசி மக்களுடன் வெள்ளிக்கிழமை தீபாவளி கொண்டாடிய சுழற்சங்கத்தினா்.

கொடைக்கானல் அருகே பெருங்காடு பகுதியில் ஆதிவாசி மக்களுடன் சுழற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினா்.

இதையொட்டி அப்பகுதியில் 40 ஆதிவாசி குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள், ஆதிவாசி மாணவா்களுக்கு புத்தாடைகள், விளையாட்டு உபகரணங்கள், இனிப்புகள், வெடி சப்தமில்லாத பட்டாசுகள் ஆகியன வழங்கப்பட்டன.

இதனைத் தொடா்ந்து நாயுடுபுரம், வில்பட்டி, பள்ளங்கி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 50- க்கும் மேற்பட்ட சிறுவா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், சுழற்சங்கத் தலைவா் கிருபா ஜோன்ஸ், செயலா் கோபிநாத், நிா்வாகிகள் ஜெயபிரசாத், சுகுமாா், ராபின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com