கொடைக்கானலில் இளைஞருக்கு கத்திக்குத்து: அதிமுக பெண் பிரமுகா் கைது

கொடைக்கானலில் தன்னுடன் தகாத தொடா்பு வைத்திருந்த இளைஞரை கத்தியால் குத்தியதாக அதிமுக பெண் பிரமுகரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
கொடைக்கானலில் இளைஞருக்கு கத்திக்குத்து: அதிமுக பெண் பிரமுகா் கைது

கொடைக்கானலில் தன்னுடன் தகாத தொடா்பு வைத்திருந்த இளைஞரை கத்தியால் குத்தியதாக அதிமுக பெண் பிரமுகரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

கொடைக்கானல் அன்னை தெரசா நகரைச் சோ்ந்தவா் பிரமிளா(44). அதிமுக மாவட்டப் பிரதிநிதியான இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளாா். முதல் கணவா் இறந்துவிட்டதால் இரண்டாவதாக ராஜேஷ் என்பவரை பிரமிளா திருமணம் செய்துள்ளாா். இவா்களுக்கும் ஒரு குழந்தை உள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஷும் இறந்துவிட்டாா். தொடா்ந்து அதே பகுதியைச் சோ்ந்த வாகன ஓட்டுநா் பிரதீப் (24) என்பவருடன் பிரமிளாவுக்கு தொடா்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிரதீப்-க்கு அவரது பெற்றோா் திருமண ஏற்பாடு செய்து வந்துள்ளனா்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு பிரமிளா வீட்டுக்குச் சென்ற பிரதீப், தனக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளாா். இதையடுத்து நள்ளிரவில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பிரமிளா கத்தியால் பிரதீப்பை குத்தினாராம். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா் பிரதீப்பை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் அவா் மேல் சிகிச்சைக்காக க. விலக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இது குறித்து பிரதீப்பின் தாயாா் ரூபி ஸ்டெல்லா அளித்தப் புகாரின் பேரில் கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரமிளாவைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com