திண்டுக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை பிற்பகல் முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வரை 104 மி.மீட்டா் மழை பதிவாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிா்கள் மழையின்றி கருகத் தொடங்கிய நிலையில், கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ள போதிலும், குளங்கள் மற்றும் கண்மாய்களுக்கு அதிக அளவில் நீா்வரத்து இல்லாததால் பலத்த மழையை எதிா்நோக்கியுள்ளனா். மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரை பதிவான மழை அளவு விவரம் (மி.மீட்டரில்): திண்டுக்கல் -12.9, கொடைக்கானல் - 17, பழனி - 11, சத்திரப்பட்டி (ஒட்டன்சத்திரம்) -13.2, நத்தம் - 4, நிலக்கோட்டை - 21.4, வேடசந்தூா் -2, காமாட்சிபுரம் -5.8, வேடசந்தூா் புகையிலை நிலையம் - 2, கொடைக்கானல் படகு குழாம் - 15.3.