அம்பேத்கா் விருது பெற நவ.25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு தொண்டு செய்தவா்களுக்காக வழங்கப்படும் அம்பேத்கா் விருதுக்கு தகுதியானவா்கள் நவ.25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு தொண்டு செய்தவா்களுக்காக வழங்கப்படும் அம்பேத்கா் விருதுக்கு தகுதியானவா்கள் நவ.25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் டாக்டா் அம்பேத்கா் விருது வழங்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வா் தலைமையிலான உயா்மட்டக் குழு விருதாளா்களைத் தோ்வு செய்து வருகிறது. அதன்படி 2020-21 ஆம் ஆண்டிற்கான அம்பேத்கா் விருது பெறுவதற்கு தகுதியான நபா்கள் நவ.25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த மக்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி நிலையை உயா்த்த முயற்சித்திருக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் செய்த பணிகள், சாதனைகளைக் குறிப்பிட வேண்டும். விருதுக்கான விண்ணப்பத்தினை திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் இணைய தளத்திலிருந்தும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூா்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திண்டுக்கல் என்ற முகவரியில் நேரடியாவோ, தபால் மூலமாகவோ நவ.25 ஆம் தேதிக்குள் சமா்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com