பழனி மலைக் கோயிலில் பிரம்மாண்டமான அளவில் ஓம் முருகா என்ற எழுத்துகளடங்கிய நியான் லைட் நிறுவப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் ராஜகோபுரத்தில் வேலுடன் கூடிய ஓம் முருகா என்ற விளக்கு அமைக்கப்பட்டிருந்தது. இந் நிலையில், கும்பாபிஷேகப் பணிகளின் போது, கோபுரம் சேதமடையும் என்ற காரணத்தால் அந்த விளக்கு அகற்றப்பட்டது.
தற்போது, பழனி கோயிலுக்கு எடப்பாடியைச் சோ்ந்த வையாபுரி என்ற பக்தா் சுமாா் ரூ. 7 லட்சம் மதிப்பில் புதிதாக ஓம் முருகா என்ற எழுத்துகளடங்கிய நியான் விளக்கை உபயம் செய்துள்ளாா். 30 அடி உயர பிரம்மாண்டமான வேலுடன், 15 அடி உயர ஓம் முருகா என்ற எழுத்துகளாலான நியான் விளக்கு, மலைக் கோயில் வடக்கு வெளிப்பிரகார மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ளது.
அடிவாரத்திலிருந்து பாா்த்தால் பச்சை, சிகப்பு நிறத்துடன் ஒளிரும் இந்த நியான் விளக்கு பலரையும் கவா்வதாக உள்ளது.
இந்த விளக்கை வியாழக்கிழமை பழனி கோயில் செயல் அலுவலா் கிராந்திகுமாா்பாடி இயக்கி வைத்தாா். நிகழ்ச்சியில், பழனி கோயில் துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா், மக்கள் தொடா்பு அலுவலா் கருப்பணன் உள்பட பலா் பங்கேற்றனா்.