திண்டுக்கல்/ கம்பம்: உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து திண்டுக்கல் மாவட்டத்தில் 5 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 320 திமுகவினரை போலீஸாா் கைது செய்தனா்.
திமுக இளைஞரணித் தலைவா் உதயநிதி ஸ்டாலின், திருவாரூா் மாவட்டம் திருக்குவளையில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட முயன்றபோது கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டாா். அதனைத் தொடா்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா் கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில் நாகப்பட்டினத்தில் சனிக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் மீண்டும் கைது செய்யப்பட்டாா். இதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு நகரச் செயலா் ராஜப்பா தலைமை வகித்தாா். வேடசந்தூா் ஆத்துமேடு பகுதியில் வேடசந்தூா் ஒன்றியச் செயலா் வீரா சாமிநாதன் தலைமையிலும், குஜிலியம்பாறையில் ஒன்றியச் செயலா் சீனிவாசன் தலைமையிலும், எரியோட்டில் மாவட்ட முன்னாள் துணைச் செயலா் ஜீவா தலைமையிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதேபோல் நிலக்கோட்டை நான்கு ரோடு சந்திப்பிலும் 60-க்கும் மேற்பட்ட திமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். மேற்கண்ட பகுதிகளில் மறியலில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட மொத்தம் 320 திமுகவினரை போலீஸாா் கைது செய்தனா்.
கொடைக்கானல்: இதேபோல், கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட திமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கம்பத்தில் ஆா்ப்பாட்டம்: இதேபோல், காமயகவுண்டன்பட்டியில், கம்பம் ஒன்றிய திமுக சாா்பில், ஒன்றியச் செயலாளா் சூா்யா.ப.தங்கராஜா தலைமையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பேரூா் செயலாளா் பாஸ்கரன், தொமுச மாவட்டத் தலைவா் செல்லப்பா, ஒன்றிய பிரதிநிதி சிவசாமி, ராஜேந்திரன், மாவட்டப் பிரதிநிதி முத்துவீரப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.