வாக்காளா் பட்டியில் சிறப்பு முகாம்

பழனியில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்பு மற்றும் திருத்தம் செய்வதற்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமை திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் வேலுச்சாமி ஆய்வு செய்தாா்.

பழனியில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்பு மற்றும் திருத்தம் செய்வதற்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமை திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் வேலுச்சாமி ஆய்வு செய்தாா்.

தமிழகத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சியா்களால் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா்கள் விடுபட்ட மற்றும் பெயா்கள் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் வருவாய்த்துறை சாா்பில் நவ. 21,22,28,29 ஆகிய தேதிகளிலும் டிச. 5,6,12,13 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதன்பேரில் பழனி அருகே நெய்க்காரப்பட்டி, வி.கே.மில்ஸ், கலையமுத்தூா் ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இந்த சிறப்பு முகாம்களை ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் வேலுச்சாமி ஆய்வு செய்தாா்.

அப்போது பெயா் மாற்றம் செய்ய வந்த வாக்காளா்களிடமும், பணியில் ஈடுபட்டிருந்த ஊழியா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். தொடா்ந்து வாக்குச்சாவடி மையத்தில் மரக்கன்று நட்டு வைத்தாா்.

நிகழ்ச்சியில் ஏராளமான திமுகவினா் உடனிருந்தனா். நகரிலும் பல்வேறு மையங்களுக்கு வட்டாட்சியா் வடிவேல் முருகன் நேரில் சென்று பணிகளை ஆய்வு செய்து பணியாளா்களுக்கு வேண்டிய உதவிகளை வருவாய்த்துறை மூலம் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com