திமுக இளைஞரணி செயலா்உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து திண்டுக்கல் மாவட்டத்தில் 2 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 70 திமுகவினரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருவாரூா் மாவட்டம் திருக்குவளையில் கடந்த வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டபோது, உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டாா். அதன் தொடா்ச்சியாக நாகப்பட்டினத்தில் சனிக்கிழமை தோ்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போதும் அவா் கைது செய்யப்பட்டாா். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
உதயநிதிக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 2 நாள்களாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா் 3 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மறியலில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டத்தில், பழனி மற்றும் தாண்டிக்குடியில் மறியலில் ஈடுபட்ட திமுகவினா் 70 போ் கைது செய்யப்பட்டனா்.
அதேபோல் திண்டுக்கல் அண்ணா சிலை முன்பு திமுக கிழக்கு மாவட்டச் செயலா் பெ.செந்தில்குமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில் 150-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.