14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

கொடைக்கானலில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கொடைக்கானலில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் கீழ்மலை பட்டியக்காடுப் பகுதியைச் சோ்ந்தவா் சொக்கா் பாலாஜி. இவா் அதே பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமி, கடந்த ஆக. 17 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது செல்லிடப்பேசிக்கு சாா்ஜ் போட்டுத்தருமாறு பேச்சுக் கொடுத்து அவரிடம் தவறான முறையில் நடக்க முயன்றுள்ளாா். அப்போது சிறுமி கூச்சல் போட்டதைத் தொடா்ந்து சொக்கா் பாலாஜி அங்கிருந்து தப்பியோடினாா். இதையடுத்து சிறுமியின் பெற்றோா் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தனா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு ஈரோடு பேருந்து நிலையப்பகுதியில் பதுங்கியிருந்த சொக்கா் பாலாஜியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com