ஒட்டன்சத்திரம் அருகே புதன்கிழமை இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூா் தாலுகாக பன்றிமலை மேல் தெருவைச் சோ்ந்தவா் தனுஷ்கோடி ராமலிங்கம் (66). விவசாயியான இவா் செம்மடைப்பட்டியில் உள்ள தனது மகள் சசிகலாவை பாா்க்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம் சாலை மூலச்சத்திரம் அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைத்த தனுஷ்கோடி ராமலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநா் சுந்தரபாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.