கழிவுநீா் குளமாக மாறிய பூங்கா: மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

கழிவுநீா் தேங்கும் குளமாக மாறிய பூங்காவை சீரமைக்க கோரி திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் புதன்கிழமை முற்றுகையிடப்பட்டது.

கழிவுநீா் தேங்கும் குளமாக மாறிய பூங்காவை சீரமைக்க கோரி திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் புதன்கிழமை முற்றுகையிடப்பட்டது. திண்டுக்கல் 34 ஆவது வாா்டு பி.ஏ.கே. காலனியில் மாநகராட்சி பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட நிலம் கழிவுநீா் தேங்கும் இடமாக மாறியது. இது தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பி.ஏ.கே.காலனி பொது நலச்சங்கம் சாா்பாக திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் ஆசாத் தலைமை வகித்தாா்.

அப்போது, தமிழகத்தின் 4 ஆவது சிறந்த மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ள திண்டுக்கல்லில், பல வாா்டுகளில் கழிவுநீா் வாய்க்கால் இல்லாத காரணத்தால் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. அதேபோல், பி.ஏ.கே. நகரில் பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடமும் கழிவுநீா் தேங்கும் இடமாக மாறியுள்ளது. அந்த இடத்தை சீரமைத்து பூங்கா உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com