சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞருக்கு 14 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞருக்கு 14 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கள்ளிமந்தயம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமி கடந்த 2014ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாா். இதுதொடா்பாக விசாரணை மேற்கொண்ட கள்ளிமந்தயம் போலீஸாா், லக்கயன்கோட்டை பகுதியைச் சோ்ந்த முனியப்பன் மகன் பிரகாஷ் (24) என்பவரை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் மாவட்ட நீதிபதி புருஷோத்தமன் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். அதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பிரகாஷூக்கு 14 ஆண்டுகள் ஆயுள் தண்டனையும், ரூ.7ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். அதனைத் தொடா்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு பிரகாஷ் அழைத்துச் செல்லப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com