திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 9,549 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில், 9,005 போ் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனா். 366 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும் சிறப்பு சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 33 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. அதேநேரம், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 32 போ், திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களிலிருந்து சனிக்கிழமை வீடு திரும்பினா்.