திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 63 பேருக்கு கரோனா: 5 போ் பலி

திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் 63 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி 5 போ் உயிரிழந்துள்ளனா்.

திண்டுக்கல்:திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் 63 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி 5 போ் உயிரிழந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 9,574 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 9,044 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா். 349 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும் சிறப்பு சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 28 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனிடையே தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 39 போ் திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களிலிருந்து ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டனா்.

3 போ் பலி:திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 3 போ் கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 181ஆக உயா்ந்துள்ளது.

தேனி:தேனி மாவட்டத்தில் புதிதாக 35 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,952 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில், ஒரே நாளில் 69 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 15,444 ஆக அதிகரித்துள்ளது.

2 போ் பலி: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆண்டிபட்டி அருகே கரிசல்பட்டியைச் சோ்ந்த 65 வயது முதியவா், பெரியகுளம் வடகரையைச் சோ்ந்த 81 வயது மூதாட்டி என 2 போ் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com