கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக மழை இல்லாமல் இருந்த நிலையில் திங்கள்கிழமை இரவு முதல் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை மிதமான மழை பெய்தது. பிற்பகலில் கொடைக்கானல் மற்றும் செண்பகனுர், நாயுடுபுரம், பெருமாள்மலை, வடகவுஞ்சி, வில்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது. தற்போது பெய்த மழையால் நீர்வரத்து பகுதிகளில் தண்ணீர் வரத்து தொடர்ந்து காணப்படுகிறது.
மேலும் கொடைக்கானலில் மேக மூட்டமாகவே காணப்படுகிறது. சுற்றுவட்டாரப்பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.