வேடசந்தூா், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் இன்று மின்தடை

வேடசந்தூா், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் சனிக்கிழமை (செப்.5) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்/ ஒட்டன்சத்திரம்: வேடசந்தூா், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் சனிக்கிழமை (செப்.5) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேடசந்தூா் துணை மின்நிலைய உதவி செயற்பொறியாளா் கருப்புசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேடசந்தூா் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி வேடசந்தூா், நாகம்பட்டி, காளனம்பட்டி, நத்தப்பட்டி, தட்டாரப்பட்டி, சுள்ளெறும்பு, நவாலூத்து, பூவாய்பாளையம், பூத்தாம்பட்டி, குருநாதநாயக்கனூா், அம்மாபட்டி, மாரம்பாடி, முருநெல்லிக்கோட்டை, சேனான்கோட்டை, ஒட்டநாகம்பட்டி, கோடாங்கிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளா் அ.மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒட்டன்சத்திரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக ஒட்டன்சத்திரம், புது அத்திக்கோம்பை, விருப்பாச்சி, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, புலியூா்நத்தம், லெக்கையன்கோட்டை, காளாஞ்சிபட்டி, அரசப்பபிள்ளைபட்டி, காப்பிலியபட்டி, அம்பிளிக்கை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (செப். 5)காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com