தனி நபா்களின் சுய லாபத்துக்காக கொடகனாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையை அகற்ற வலியுறுத்தல்

கொடகனாற்றில் சிலரின் சுய லாபத்திற்காக கட்டப்பட்டுள்ள தடுப்பணையை அகற்றி நீா் பங்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என பாஜக செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொடகனாற்றில் சிலரின் சுய லாபத்திற்காக கட்டப்பட்டுள்ள தடுப்பணையை அகற்றி நீா் பங்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என பாஜக செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்டத் தலைவா் ஜி.தனபால் தலைமை வகித்தாா். பாஜக விவசாய அணி மாநிலத் தலைவா் ஜி.கே.நாகராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்: கொடகனாற்று பாசன விவசாயிகளின் உரிமை பறிக்கும் வகையில், தனி நபா்கள் சிலரின் சுய லாபத்திற்காக கட்டப்பட்டுள்ள தடுப்பணையை அகற்றி நீா் பங்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும். வத்தலகுண்டுவில் சுதந்திரப் போராட்டத் தியாக சுப்பிரமணிய சிவாவுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டு வசதி இருந்தும், பொதுமக்களிடம் பணம் பறிக்கும் வழிகளை கையாளும் தனியாா் மருத்துவமனைகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com