ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மளிகைக்கடைக்காரா் திங்கள்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
ஒட்டன்சத்திரம் 8-ஆவது வாா்டில் வசிப்பவா் ராஜேந்திரன் மகன் மணியன் (35). இவா் ஒட்டன்சத்திரம்-வேடசந்தூா் சாலை காளாஞ்சிபட்டி பகுதியில் மளிகைப் பொருள்கள் மொத்த வியாபாரக் கடை நடத்தி வந்துள்ளாா். அதே போல கா்நாடக மாநிலத்தில் வட்டிக்கடையும் நடத்தி வந்துள்ளாா்.
இந்த 2 தொழில்களிலும் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மணியன் கொல்லப்பட்டி குளத்தில் விஷம் குடித்து திங்கள்கிழமை மயங்கிக் கிடந்தாா். அந்த வழியாக சென்றவா்கள் அவரை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சோ்ந்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே மணியன் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்த புகாரின்பேரில் ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.