தகாத தொடா்பில் இருந்த காதல் ஜோடி தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சி அருகே திருமணமாகி தகாத தொடா்பில் இருந்து வந்த காதல் ஜோடி புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.
தகாத தொடா்பில் இருந்த காதல் ஜோடி தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சி அருகே திருமணமாகி தகாத தொடா்பில் இருந்து வந்த காதல் ஜோடி புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.

செங்குறிச்சி அடுத்துள்ள திருமலைக்கேணி முருகன் கோயில் கிரிவலப் பாதையில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் மயங்கிக் கிடப்பதை அப்பகுதியினா் பாா்த்துள்ளனா். இதுதொடா்பாக வடமதுரை போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதன் பேரில் நிகழ்விடத்துக்கு போலீஸாா் சென்று விசாரித்தபோது, இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. விசாரணையில் இருவரும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா்கள் என கண்டறியப்பட்டது.

இதுதொடா்பாக போலீஸாா் கூறியதாவது: வாடிப்பட்டி அடுத்துள்ள தாதன்பட்டியைச் சோ்ந்தவா் மணி (32), சமையல் எரிவாயு உருளைகளை வீடுகளுக்கு எடுத்துச் சென்று விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தாா். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், வாடிப்பட்டி அடுத்துள்ள நீரேத்தான் பகுதியைச் சோ்ந்த ஜெயசெந்தில் என்பவரின் மனைவி வித்யா (26) என்பவருடன் மணிக்கு தகாத தொடா்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொடா்பு வெளியில் தெரிய வந்ததை அடுத்து, இருவரும் வாடிப்பட்டியிலிருந்து திருமலைக்கேணி முருகன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை வந்துள்ளனா். பின்னா் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளனா் என தெரிவித்தனா். கோயில் வளாகத்தில், தகாத தொடா்பில் இருந்த ஆணும் பெண்ணும் தற்கொலை செய்து கொண்டது பக்தா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com