திண்டுக்கல் அங்குநகா் துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை (செப்.19) நடைபெறுவதால், மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்று காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரை இங்கிருந்து மின் விநியோகம் பெறும் திண்டுக்கல் நகா் முழுவதும், செட்டிநாயக்கன்பட்டி, குரும்பபட்டி, பொன்மாந்துறை, விராலிப்பட்டி ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும் என, மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் (திண்டுக்கல் மேற்கு) ச. ராமன் தெரிவித்துள்ளாா்.