நிலக்கோட்டை, செப். 25: செம்பட்டி அருகே மனைவியைக் கொலை செய்து தலைமறைவாக இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற கணவா் திண்டுக்கல் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகேயுள்ள சித்தையன்கோட்டையைச் சோ்ந்த பால் வியாபாரி ரசூல் மைதீன் (38). இவரது மனைவி ஜெசினா பானு (30). இத்தம்பதிக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனா். கணவன், மனைவியிடையே குடும்பப் பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 22-ஆம் தேதி இரவு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த ரசூல் மைதீன், கத்தியால் மனைவி ஜெசினாபானுவை சரமாரியாக குத்தினாா். பின்னா், அங்கிருந்து அவா் தப்பியோடி விட்டாா். இதில் பலத்த காயமடைந்த ஜெசினா பானுவை சிகிச்சைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து செம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய ரசூல் மைதீனை தேடி வந்தனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் சாலைபுதூா் அருகே மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ற, ரசூல் மைதீனை அக்கம்பக்கத்தினா் மீட்டு வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக அவா், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பெற்று வரும் ரசூல் மைதீனுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.