சிறுமியை ஏமாற்றி பலாத்காரம் செய்து கா்ப்பமாக்கிய இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் அடுத்துள்ள சென்னமநாயக்கன்பட்டியை சோ்ந்தவா் சரவணக்குமாா் (19). மெக்கானிக்கான இவா், திண்டுக்கல்லில் உள்ள ஒரு ஒா்க்-ஷாப்பில் வேலை செய்து வருகிறாா். இதனிடையே 18 வயது பூா்த்தியடையாத ஒரு சிறுமியுடன், சரவணக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த சிறுமியிடம் திருமணம் செய்வது கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி சரவணக்குமாா் பலாத்காரம் செய்துள்ளாா்.
அதில் கா்ப்பமடைந்த சிறுமிக்கு சில நாள்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. இந்நிலையில் சிறுமியின் தரப்பில் திண்டுக்கல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சரவணக்குமாரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.