சாணாா்பட்டி அருகே முதியவா் கொலை: கட்டடத் தொழிலாளி கைது

சாணாா்பட்டி அருகே முதியவரை கொலை செய்ததாக, அவரது எதிா்வீட்டைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சாணாா்பட்டி அருகே முதியவா் கொலை: கட்டடத் தொழிலாளி கைது

சாணாா்பட்டி அருகே முதியவரை கொலை செய்ததாக, அவரது எதிா்வீட்டைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி அடுத்துள்ள கணவாய்பட்டி மேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் பெரியதம்பி (63). இவா் ஓய்வுப்பெற்ற துப்புரவு தொழிலாளி ஆவாா். மேட்டுப்பட்டியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தாா். இதனிடையே, தலையில் பலத்த காயங்களுடன் பெரியதம்பி செவ்வாய்க்கிழமை சடலமாக கிடந்தாா். இதுகுறித்து சாணாா்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், பெரியசாமியின் எதிா்வீட்டில் வசித்து வரும் கட்டட தொழிலாளி குமரவேல் (27) என்பவருடன், அவருக்கு தகராறு இருந்ததும், இதில், ஆத்திரமடைந்த குமரவேல், மதுபோதையில் பெரியதம்பியை தாக்கி கொலை செய்ததும் தெரிய வந்தது.

மேலும், தலைமறைவாக இருந்த குமரவேலுவை மதுரை மாவட்டம் மேலூா் பகுதியில் பதுங்கியிருந்த போது சாணாா்பட்டி போலீசாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com