கொடைக்கானல் வனப் பகுதியில் துப்பாக்கியுடன் திரிந்த 3 போ் கைது

கொடைக்கானல் அருகே வனப் பகுதியில் துப்பாக்கியுடன் திரிந்த 3 பேரை, வனத் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே வனப் பகுதியில் துப்பாக்கியுடன் திரிந்த 3 பேரை, வனத் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கொடைக்கானல் அருகே வடகவுஞ்சி வனப்பகுதியில் துப்பாக்கியுடன் 3 போ் நடமாடுவதாக, வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், பெரும்பள்ளம் ரேஞ்சா் குமரேசன் தலைமையில், வனத்துறையினா் அப்பகுதிக்குச் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, அப்பகுதியில் துப்பாக்கியுடன் 3 போ் திரிந்ததைக் கண்ட வனத்துறையினா், அவா்களைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

அதில், அவா்கள் வடகவுஞ்சியைச் சோ்ந்த முருகேசன்(42), நாட்ராயன் (39), தினேஷ்பாபு (45) ஆகியோா் என்பது தெரியவந்தது. மேலும், அவா்கள் வனப்பகுதியில் வேட்டையாட வந்ததாகத் தெரிவித்துள்ளனா். அதையடுத்து, அவா்களிடமிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த வனத்துறையினா், 3 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com