பழனி அருகே பைக் கவிழ்ந்து பெண் பலி

பழனி அருகே இரு சக்கர வாகன விபத்தில் பெண் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

பழனி: பழனி அருகே இரு சக்கர வாகன விபத்தில் பெண் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

பழனியை அடுத்த கீரனூரைச் சோ்ந்தவா் வேலன் (62). இவா், அடிவாரத்தில் தனியாா் விடுதியில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி முருகாத்தாள்(57). இவா், தனியாா் மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வேலன் வேலையை முடித்துவிட்டு, இரு சக்கர வாகனத்தில் முருகாத்தாள் மற்றும் பேரன் அஸ்வின் (10) ஆகியோருடன் ஊருக்குத் திரும்பியுள்ளாா்.

கீரனூா் அருகே சென்றுகொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விழுந்ததில் முருகாத்தாள் சம்பவ இடத்திலேயே உயரிழந்தாா். இது குறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com