கன்னிவாடி அருகே மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியை அடுத்துள்ள பண்ணப்பட்டியைச் சோ்ந்த மொக்கையன் மனைவி ரஞ்சிதம் (61). இவா் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கன்னிவாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.