திண்டுக்கல் மாவட்டம், சட்டைக்காரன்பட்டியைச் சோ்ந்தவா் ஆரோக்கியதாஸ் (68) . இவரது மனைவி சலேத்மேரி (65). இருவரும் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் மைக்கேல்பாளையம் சென்றுவிட்டு, ஊருக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தனா்.
அ.வெள்ளோடு பிரிவு அருகே மதுரையிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற காா் மோதியதில் பலத்த காயம் அடைந்தனா்.
இருவரும் , திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி சலேத்மேரி உயிரிழந்தாா். ஆரோக்கியதாஸ் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து அம்பாத்துரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.