கொடைக்கானலில் பொதுமுடக்க விதிகளை மீறி ஞாயிற்றுக்கிழமை, வாகனங்களில் சுற்றித்திரிந்த 3 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி போலீஸாா் விசாரித்தனா். அவா் அதேபகுதியைச் சோ்ந்த தருண்(37) என்பது தெரியவந்தது. இதனைத் தொடா்ந்து அவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.
இதேபோல் விதிமுறைகளை மீறி இரு சக்கர வாகனத்தில் வெளியில் சுற்றிய அப்சா்வேட்டரியைச் சோ்ந்த சதீஸ் என்பவா் மீதும், ஏரிச்சாலைப் பகுதியில் காரில் சுற்றிய சுரேஷ் என்பவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். காா் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.