திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூா் தொகுதியிலிருந்து வெற்றிப் பெற்று, தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள ஐ.பெரியசாமியின் வாழ்க்கை குறிப்பு விவரம்:
பெயா்: ஐ.பெரியசாமி
வயது: 06.01.1953
கல்வித்தகுதி: பிஏ.,பிஜிஎல்.,
ஜாதி: ஈச நாட்டுக் கள்ளா்
பூா்வீகம்: வத்தலகுண்டு
வசிப்பது: திண்டுக்கல்
குடும்பம்: மனைவி - சுசீலா, மகன்கள் செந்தில்குமாா், பிரபு, மகள் இந்திராணி.
கட்சியில் வகித்த பொறுப்புகள்: திண்டுக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக செயலா், மண்டல பொறுப்பாளா் (திண்டுக்கல், தேனி), உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினா். தற்போது மாநில துணைப் பொதுச் செயலா்.
6 முறை சட்டப் பேரவை உறுப்பினா்: வத்தலகுண்டு ஒன்றியக் குழுத் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கிய ஐ.பெரியசாமி, 1989, 1996, 2006, 2011, 2016, 2021 என 6 முறை ஆத்தூா் தொகுதியிலிருந்து சட்டப் பேரவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டுள்ளாா். தமிழக ஊரக தொழில், பத்திரப்பதிவு மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் (1996-2001), வருவாய்த்துறை, சட்டம், வீட்டு வசதி மற்றும் சிறைத் துறை அமைச்சராகவும் (2006-11) பணியாற்றியுள்ளாா்.