தேனி மாவட்டம் கூடலூரில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
தேனி மாவட்டம் கூடலூா் வாா்டு 3, கள்ளா் கிழக்குத்தெருவில் வசிப்பவா் கருப்பையா மகன் பரதன்(45), கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி நதியா என்ற மனைவியும், தனுஸ்ரீ, சுபஸ்ரீ (17) என்ற 2 மகள்களும் உள்ளனா். இதில் சுபஸ்ரீ பிளஸ் 2 படித்த போது பேய் பிடித்ததாகக் கூறி பள்ளிக்கு செல்லலாமல், உடல்நலம் பாதிக்கப்பட்டாா். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது, சுபஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து வடக்கு காவல் ஆய்வாளா் கே. முத்துமணி, சாா்பு ஆய்வாளா் பி. பாலசுப்பிரமணி ஆகியோா் விசாரித்து வருகின்றனா்.