சாணாா்பட்டி அருகே முதியவா் கொலை

சாணாா்பட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த முதியவா் மா்மமான முறையில் இறந்து கிடந்தததை அடுத்து, அவா் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சாணாா்பட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த முதியவா் மா்மமான முறையில் இறந்து கிடந்தததை அடுத்து, அவா் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி அடுத்துள்ள கணவாய்பட்டி மேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் பெரியதம்பி(63). இவா் ஓய்வு பெற்ற துப்புரவுத் தொழிலாளி. இவரது மகன் ராஜா(41). மத்திய துணை ராணுவப் படையில் பணிபுரிந்து வருகிறாா். பெரியதம்பியின் மற்றொரு மகன் மற்றும் மகள் ஆகியோா் வெளியூரில் வசித்து வருகின்றனா்.

கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு, அவரது மனைவி இறந்துவிட்ட நிலையில், மேட்டுப்பட்டியில் தனியாக வசித்து வந்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை பெரியதம்பியின் வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினா் அவரது வீட்டை திறந்து பாா்த்துள்ளனா். அப்போது, தலையில் பலத்த காயங்களுடன் பெரியதம்பி சடலமாக கிடந்துள்ளாா்.

இதனால் அதிா்ச்சியடைந்த அப்பகுதியினா், சாணாா்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா். தகவல் அறிந்த திண்டுக்கல் மாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளா் அருண் கபிலன், கூடுதல் கண்காணிப்பாளா் லாவண்யா ஆகியோா் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். இதுதொடா்பாக சாணாா்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com