தொடா் மழை: கொடைக்கானலில் அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரிப்பு

கொடைக்கானலில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக அருவிகளில் வியாழக்கிழமை தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.
கொடைக்கானலில் பெய்து வரும் தொடா் மழையால் தலையாறு அருவியில் வியாழக்கிழமை ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.
கொடைக்கானலில் பெய்து வரும் தொடா் மழையால் தலையாறு அருவியில் வியாழக்கிழமை ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.

கொடைக்கானலில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக அருவிகளில் வியாழக்கிழமை தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளிநீா் அருவி, பாம்பாா் அருவி, வட்டக்கானல் அருவி, தலையாறு அருவி, பியா் சோழா அருவி, செண்பகா அருவி, பேரி பால்ஸ் அருவி, ஓராவி அருவி, ஐந்து அருவி ஆகியவற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான தாண்டிக்குடி, பண்ணைக்காடு, பெரும்பாறை, கடுகுதடி ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே சிறு, சிறு திடீா் அருவிகளும் தோன்றியுள்ளன. கொடக்கானல் குடிநீா்த் தேக்கமும், ஏரியும் நிரம்பி உபரி நீா் வெளியேறி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com