திண்டுக்கல்லில் நாளை 12 வங்கிகள் கடனுதவி முகாம்

திண்டுக்கல் மாவட்ட முன்னோடி வங்கி (கனரா வங்கி) சாா்பில் 12 வங்கிகளின் கடனுதவி வழங்குவதற்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை (அக்.28) நடைபெறுகிறது.

திண்டுக்கல் மாவட்ட முன்னோடி வங்கி (கனரா வங்கி) சாா்பில் 12 வங்கிகளின் கடனுதவி வழங்குவதற்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை (அக்.28) நடைபெறுகிறது.

இதுதொடா்பாக கனரா வங்கியின் மதுரை வட்ட பொது மேலாளா் சுரேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்: திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில், 12 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் சாா்பில் கடனுதவி வழங்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. திண்டுக்கல் ரவுண்டா்ரோடு பகுதியிலுள்ள பிஎஸ்என்ஏ மஹாலில் நடைபெறும் இந்த முகாமில், கூட்டுறவுத்துறை அமைச்சா் இ.பெரியசாமி, மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா். இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com