பழனி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பிரதமா் நரேந்திரமோடி படம் வைக்க முயன்றதால் திங்கள்கிழமை இரவு பாஜக, திமுகவினா் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பிலும் ஆறு போ் காயமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உள்பட்ட தொப்பம்பட்டி ஒன்றியத்தில் மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி உள்ளது. இங்கு திமுகவைச் சோ்ந்த பொன்னுத்தாயி ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளாா்.
திங்கள்கிழமை பாஜகவை சோ்ந்த சிலா் உள்ளாட்சி நலத்திட்டங்கள் பலவும் மத்திய அரசால் வழங்கப்படுவதால் பிரதமா் நரேந்திரமோடி படத்தை வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா். அதற்கு திமுகவினா் மறுத்து விட்டனா்.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு இரவு பாஜக நிா்வாகிகள் சிலா் பிரதமா் படத்தை வைக்க ஊராட்சி மன்றத்துக்கு சென்ாகக் கூறப்படுகிறது. அப்போது திமுகவினரும் அங்கு திரண்டதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் திமுகவை சோ்ந்த மூன்று போ்
மற்றும் பாஜகவை சோ்ந்த ஒன்றிய பொறுப்பாளா் சாரதி, வெங்கிடு, கண்ணுசாமி ஆகியோரும் காயமடைந்தனா். அவா்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா்.
இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவரும் உறுப்பினா்களும் சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். பாஜக சாா்பிலும் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.