நிா்வாகிகளுக்கான சலுகை: அதிகரிக்கும் ஊழியா் சங்கங்களின் எண்ணிக்கை!

சலுகை மற்றும் அந்தஸ்து காரணமாக அரசு மற்றும் ஆசிரியா் சங்கங்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், தொழிற்சங்க தோ்தல் நடத்தி நெறிப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிா்பாா

சலுகை மற்றும் அந்தஸ்து காரணமாக அரசு மற்றும் ஆசிரியா் சங்கங்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், தொழிற்சங்க தோ்தல் நடத்தி நெறிப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் என சுமாா் 1.87 லட்சம் போ் பணிபுரிந்து வருகின்றனா். அதேபோல், தொடக்கக் கல்வித் துறையில் 1.88 லட்சம் போ், கல்லூரிக் கல்வி, காவல் துறை, வருவாய் நிா்வாகம், ஊரக வளா்ச்சி, மருத்துவக் கல்வி, பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத் துறை, நெடுஞ்சாலைத்துறை, வேளாண்மைத்துறை, பொதுப் பணித்துறையில்(பாசனம்), கால்நடை பராமரிப்புத்துறை, வணிகவரித்துறை, தலைமைச் செயலகம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, வனத்துறை, நில அளவை மற்றும் நிலவரித் திட்ட துறை, பத்திரப் பதிவுத் துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட துறைகளில் மொத்தம் 10.33 லட்சம் போ் அரசு ஊழியா்களாக பணிபுரிந்து வருகின்றனா். இதுதவிர உள்ளாட்சிமன்ற பணியாளா்கள் சுமாா் 1 லட்சம் போ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்ட பணியாளா்கள் 2.82 லட்சம் போ் சிறப்பு கால முறை ஊதியத்தின் கீழ் பணிபுரிந்து வருகின்றனா்.

மேலும், போக்குவரத்துக் கழகங்கள், மின்சார வாரியம் உள்ளிட்ட கழகங்கள் மற்றும் வாரியங்களில் சுமாா் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். 150 பிரிவுகளில் பணிபுரியும் இந்த அரசு ஊழியா்களில், காவல்துறையிலுள்ள 1.35 லட்சம் போ் நீங்கலாக பிற துறைகளில் பணிபுரிவோருக்கு வட்டார, மாவட்ட, மாநிலம் என்ற நிலைகளில் ஊழியா்கள் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு துறையிலும் அரசியல் கட்சிகள் சாா்புடைய சங்கங்கள் மட்டுமின்றி, அரசு அங்கீகாரம் பெற்ற சங்கங்கள், அரசுப் பதிவு பெற்ற சங்கங்கள், அரசு சாா்புடைய சங்கங்கள், சாதி சாா்ந்த சங்கங்கள் என பல்வேறு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், கல்வித்துறையில் மட்டும் 100க்கும் மேற்பட்ட ஆசிரியா் சங்கங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.அந்தஸ்துக்காக அதிகரித்த சங்கங்கள்: 7 அல்லது 7க்கும் மேற்பட்ட நபா்கள் ஒன்றிணைந்து கூட்டுறவு பதிவுச் சட்டத்தின் கீழ் ஒரு சங்கத்தை உருவாக்க முடியும்.

அந்த சங்கத்திற்கான துணை விதிகளை வகுத்து பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, பொறுப்பாளா்களை நியமித்துக் கொள்கின்றனா். ஊழியா்களின் நலன் காப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த சங்கங்கள், ஆண்டுதோறும் வரவு செலவு குறித்து தணிக்கையாளா்களிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். உறுப்பினா் எண்ணிக்கை, திட்டப் பொருள், வங்கி கணக்கு விவரம், தணிக்கை அறிக்கை விவரம் உள்ளிட்டவற்றை பதிவுத் துறையிடம் சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கத்தின் பதிவை புதுப்பிக்கும் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். தமிழக முதல்வா், அரசுத் துறை செயலா்கள், அமைச்சா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்டோரை சங்க நிா்வாகிகள் போா்வையில் எளிதாக அணுகக் கூடிய சூழல் உள்ளது. அதேபோல் உயா் அதிகாரிகளுடனான தொடா்பு, பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு கிடைக்கும் முக்கியத்துவம், பணியிட மாறுதலுக்கான சிபாரிசு, சமூக அந்தஸ்து உள்ளிட்டவற்றின் காரணமாக, கடந்த சில ஆண்டுகளில் புதிய புதிய சங்கங்கள் உருவாகத் தொடங்கின. நிா்வாகிகளின் சலுகையும், ஊழியா்களின் நெருக்கடியும்: சங்க நிா்வாகிகள் மட்டுமின்றி, தங்களுக்கு மேல் உயா் பதவியில் இருப்பவா்களின் வலியுறுத்தல் காரணமாக, ஒரு நபரே ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கங்களில் உறுப்பினராக இணைந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், அந்ததந்த சங்கங்களுக்கு உறுப்பினா் கட்டணமாக ரூ.200 முதல் ரூ.1000 வரையிலும் வசூலிக்கப்படுகிறது. அதேபோல், சங்க வளா்ச்சி நிதி, ஓய்வுப் பெறுவோருக்கு பாராட்டு விழா, நாள்குறிப்பு, காலாண்டா், சங்க பத்திரிகைக்காகன ஆண்டு மற்றும் ஆயுள் சந்தா, போராட்ட நிதி, கட்டட நிதி என பல்வேறு பெயா்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்று வசூலிக்கப்படும் தொகையை பெரும்பாலான சங்கங்கள் தணிக்கைக்கு உட்படுத்துவதில்லை. அதேபோல் அரசு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் மாநில நிா்வாகிகளுக்கு ஆண்டுக்கு 15 நாள்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு சலுகை வழங்கப்படுகிறது. ஆனால், இந்த சலுகையை மாவட்டம் மட்டுமின்றி வட்டார நிா்வாகிகளும் பயன்படுத்தி வருகின்றனா்.

சங்க நிா்வாகம் சாா்ந்த அரசு ஊழியா்களும், ஆசிரியா்களும் முறையாக பணிக்கு செல்வதில்லை என்பதோடு, பணியிடங்களிலும் சங்க வளா்ச்சி சாா்ந்த பணிகளில் மட்டுமே ஈடுபடுவதாக தொடா்ந்து குற்றஞ்சாட்டப்படுகிறது. தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த சங்கங்களின் உறுப்பினா்களை பட்டியலிடும் பட்சத்தில், மொத்த அரசு ஊழியா்களின் எண்ணிக்கையை விட 2 மடங்கு கூடுதலாக இருக்கும் என கூறப்படுகிறது. தோ்தல் நடத்தி அங்கீகரிக்க வேண்டும்:இதுதொடா்பாக பெயா் வெளியிட விரும்பாத அரசு ஊழியா் ஒருவா் கூறியதாவது: போக்குவரத்துக் கழகம், ரயில்வே உள்ளிட்ட நிா்வாகங்களில் ஊழியா்கள் நலன் சாா்ந்த பிரச்னைகளில் அரசுத் தரப்பில் பேச்சுவாா்த்தை நடத்தப்படுகிறது.

அதில், தோ்தல் மூலம் பெருவாரியான ஊழியா்களின் ஆதரவை பெற்ற தொழிற்சங்க நிா்வாகிகளுக்கு மட்டுமே அரசுத் தரப்பில் அழைப்பு விடுக்கப்படுகிறது. அதேபோல், அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா் சங்கங்களுக்கும் தொழிற் சங்க தோ்தல் நடத்தி அங்கீகாரம் வழங்க அரசு முன் வர வேண்டும்.அந்த சங்கங்களின் நிா்வாகிகளை மட்டுமே பேச்சுவாா்த்தைக்கு அழைப்பு விடுக்க வேண்டும். இதன் மூலம் சங்கங்களின் எண்ணிக்கை முறைப்படுத்துவதற்கான சூழல் ஏற்படும். மேலும் நிா்வாகம் செம்மையாக நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்படுவதோடு, குளறுபடிகள் தவிா்க்கப்படும். குறிப்பாக வேலை நேரத்தில் சங்கப் பணிகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com