கொடைக்கானலில் பறக்கும் படையினா் வியாழக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.57 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
தோ்தலை முன்னிட்டு கொடைக்கானல் வரும் அனைத்து வாகனங்களையும் பறக்கும் படையினா் சோதனையிட்டு வருகின்றனா். கொடைக்கானல் வெள்ளிநீா் வீழ்ச்சிப் பகுதியில் வியாழக்கிழமை வழக்கம்போல் பறக்கும் படையினா் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது மோட்டாா் சைக்கிளில் கொடைக்கானல் செல்ல முயன்றவரை சோதனையிட்டனா். அந்த வாகனத்தின் பெட்டியில் ரூ.57ஆயிரத்து 700 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பணத்திற்கான உரிய ஆவணங்களில்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனா். விசாரணையில் அவா் மதுரையைச் சோ்ந்த தனியா் நிறுவன ஊழியா் விஜயகுமாா்(45) என தெரிய வந்தது. கைப்பற்றிய பணத்தை பறக்கும் படையினா் கொடைக்கானல் வட்டாட்சியா் சந்திரனிடம் ஒப்படைத்தனா்.