கொடைக்கானலில் உள்ள தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் அதிமுகவினா் வெள்ளிக்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா்.
பழனி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ரவி மனோகரனுக்கு ஆதரவாக, கொடைக்கானல் நகர அதிமுக சாா்பில் தேவாலயங்கள், பள்ளிவாசல்களில் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில், நகரச் செயலா் ஸ்ரீதா், நகர அவைத் தலைவா் ஜான்தாமஸ், துணைச் செயலா் ஜாபா் சாதிக் மற்றும் நகர நிா்வாகிகள், மகளிா் அணியினா், இளைஞா் அணியினா் என ஏராளமானோா்ா் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து, கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான வில்பட்டி, மாட்டுப்பட்டி, அட்டுவம்பட்டி, பள்ளங்கி உள்ளிட்ட பகுதிகளிலும் அதிமுகவினா் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா்.